சென்னை, ஜூலை 13 -
ஒன்றிய அரசு 2008 ஆம் ஆண்டு எல்ஐசி முகவர் களை முறைசாரா தொழி லாளர்களாக அங்கி கரித்துள்ளது. அதன் அடிப் படையில் 2018 ல் கேரள இடது முன்னணி அரசு, எல்ஐசி முகவர்களுக்கு நல வாரியம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1.5 லட்சம் எல்ஐசி முகவர்க ளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழி லாளர் நலத்துறை அமைச் சர் சி.வெ.கணேசனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத் தின் (லிகாய்), தென் மண்டல தலைவரும் முன்னாள் எம்பியுமான ஏ.வி. பெல்லார்மின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், தென்மண்டல செயல் தலைவர் எம்.செல்வராஜ், தென் மண்டல செயலாளர்கள் கே.தாமோதரன், டி.கே.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.