திருவண்ணாமலை, பிப்.19- திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் ஆடை யூர் கிராம அருகே உள்ள கலர் கொட்டாய் கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகளாக பன்னியாண்டி சமூ கத்தைச் சேர்ந்த ஏழு குடும்பத்தினர் நெடுஞ் சாலையோரம் குடிசை வீடு கள் அமைத்து வாழ்ந்து வந்த னர். கடந்த 2013 ஆம் ஆண்டு சாலை விரி வாக்கம் காரணமாக அவர்கள் வசித்து வந்த குடியிருப்பு கள் அகற்றப்பட்டது. இதையடுத்து ஆடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட புனல் காடு மேடு என்ற இடத்தில் அரசு ஒதுக்கிய புறம்போக்கு இடத்தில் 10ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வரும் அவர்களுக்கு இது வரை பட்டா வழங்கப்பட வில்லை. எனவே, ஏழை, எளிய விளிம்பு நிலை யில் உள்ள பன்னியாண்டி சமூக மக்களுக்கு அரசு உடனடி யாக பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.ராம தாஸ் மாவட்ட குழு உறுப் பினர் குமரன் ஆகியோர் தலைமையில் திருவண்ணா மலை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.