districts

img

உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க கோரிக்கை

உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று (ஏப்-25) பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.காளமேகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் லாயர்ஸ் அசோசியேஷன் சங்க செயலாளர் ரமேஷ், பார் அசோசியேஷன் சங்க நிர்வாகி பி.வெங்கடேசலு உள்ளிட்ட பலர் பேசினர். இதேபோல் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர்கள் ஏ.என்.சேகர், மு.மணிபாலன், ஆனந்தராஜ், ஜோதிராம், வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.