திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி பகுதியில் திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த தரை பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவில் வாகனங்களில் செல்லும் பயணிகளுக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு அந்த தலைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.