districts

சென்னை முக்கிய செய்திகள்

இளம்பெண் தற்கொலை

சென்னை, நவ. 25- பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கொல்லம் விரைவு ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் முக்கிய ரயில் நிலையமாக பழவந்தாங்கல் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு ஞாயி றன்று மாலை 5 மணி அளவில் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண்  4-வது நடைமேடையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் விரைவு ரயில் வந்துகொண்டிருந்தது. இந்த ரயில் பழ வந்தாங்கல் நிலையத்தை அடைந்தபோது, நடை மேடையில் நின்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென ரயில் முன் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மத்திய சென்னையில் மாதர் சங்க கிளைகள் உதயம்

சென்னை, நவ. 25 - அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் புதிய கிளைகள் அண்ணா நகர், எழும்பூர் பகுதிகளில் உதயமாகி உள்ளது. அண்ணாநகர் பகுதி, எம்.எச். காலனி கிளை அமைப்புக் கூட்டத்தில் மத்திய சென்னைமாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வெ.தன லட்சுமி, பகுதி தலைவர் உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.கிளைத்  தலைவராக சரஸ்வதி, செயலாளராக ஆனந்த் ஜோதி, பொருளாளராக புவனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எழும்பூர் எழும்பூர் பகுதி புல்லாபுரம் கிளை அமைப்புக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் வெ.தனலட்சுமி,  பகுதிச் செயலாளர் ஆ.நாகராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கிளைத் தலைவராக  லட்சுமி தேவி, செயலாளராக நாகலட்சுமி, பொருளாளராக ராஜேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுராந்தகம் கூட்டுறவு ஆலையில்  சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மதுராந்தகம், நவ. 25- மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மதுராந்தகம் அடுத்த படாளத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒன்றிய அரசு அதிகாரிகள், சர்க்கரைத்துறை இயக்குநர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது விவசாய சங்கத்தின் காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, கரும்பு விவசாயிகளின் கோரிக்கை மற்றும் ஆலோசனைகளை மனுவாக கொடுத்துள்ளார்.  அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒன்றிய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாக்க வேண்டும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம் விலையாக வழங்க வேண்டும், கரும்பு வெட்டு கூலியை ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும், கரும்பு பயிர் செய்ய உரம், பூச்சி கொல்லி மருந்து மானிய விலையில் விவசாயிக்கு வழங்க வேண்டும் கரும்பு விதை முழுமையாக மானியத்தில் வழங்க வேண்டும். நோய் தாக்குதல்,மழை வெள்ளம், வறட்சியால் கரும்பு பயிர் பாதிக்கப்பட்டால் அரசு முழுமையாக நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் காலதாமதம் இல்லாமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். காஞ்சிபுரம் வட்டத்தில், சிறு காவேரிப்பாக்கம், கோவிந்தவாடி, திருப்புக்குழி-பிர்காவில் உள்ள 63 கிராமங்கள், திருத்தணி சர்க்கரை ஆலை யுடன் இணைக்கப்படுவதை ரத்து செய்து மதுராந்தகம் கூட்டுறவு ஆலையுடன் இணைக்க வேண்டும். மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி செய்யவேண்டும், சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்க நவீன கருவி களை அமைத்த தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

கங்காதீஸ்வரர் கோவில் பயனாளிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ. 25 - கங்காதீஸ்வரர் கோவில் நிலத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (நவ.25) புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கங்காதீஸ்வரர் கோவில் நில அடிமனை வாடகைதாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.நாகபூசனம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கே. முருகன் உள்ளிட்டோர் பேசினர்.

அமைப்புசாரா சங்க கிளை உதயம்

சென்னை, நவ. 25 - அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கிளை ஆயிரம் விளக்கு பகுதி, 109 வது வட்டம் நமச்சிவாயபுரத்தில்  உதயமானது. இந்த கிளை அமைப்புக் கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், பகுதித் தலைவர் இரணியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கிளை தலைவராக எஸ். சுலோச்சனா,  செயலாளராக   எஸ்.ராஜ்குமார், பொருளாளராக   என். செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேமாளூரில் இடிக்கப்பட்ட 144 வீடுகளுக்கு நிவாரணம்: ஆட்சியர்

கள்ளக்குறிச்சி நவ 25 –   கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாளூர் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை  உயர்நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இடிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வந்த 350-க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்தை சந்தித்தனர். அப்போது, வீடுகளை இழந்த தங்களுக்கு அரசின் சார்பில் உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் மறுவாழ்வு வேண்டியும் பாதிக்கப்பட்ட மக்கள் புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்டப் பொருளாளர் பிலோமின் தாஸ் தலைமையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், அப்பகுதியில் நிலம் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டுவதற்கான நிதியுதவி வழங்கவும்,  நிலம் இல்லாதவக்ளுக்கு புகைப்பட்டி மற்றும் கெடிலம் ஆகிய பகுதிகளில் நிலம் ஒதுக்கி வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

வேலூர், நவ.25- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.  வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், வெள்ளேரி கிராம மக்கள்  மற்றும் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் வந்து மனு அளித்தனர். அம்மனுவில், எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு கடந்த 35 ஆண்டுகளாக பேருந்து வசதி கிடையாது. வேலூர் மற்றும் குடியாத்தத்தில் இருந்து இயக்கப்படும் 3 பேருந்துகள் சென்றாம்பள்ளி வரை 

58 ஆயிரம் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க மனு

சென்னை,நவ.25- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வ தற்கான சிறப்பு முகாம்கள் சென்னை யில் 4 நாட்கள் நடைபெற்றன. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட  16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 89,256 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 18 வயது நிரம்பிய இளம் வயதி னர் மட்டும் 58,374 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்-6ஐ பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். இவர்கள் 18 வயது நிரம்பியதற்கான வயது சான்றுடன் விண்ணப்பித்தனர். பெரம்பூர் தொகுதியில் அதிக பட்சமாக 6,097 பேர் விண்ணப்பி த்துள்ளனர். அடுத்ததாக ஆர்.கே.நகர் தொகுதியில் 5,227 பேரும், திரு.வி.க. நகர் தொகுதியில் 5,306 பேரும் மனு கொடுத்துள்ளனர். வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்த வர்கள், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கு 29,501 பேர் மனு கொடுத்துள்ளனர். வாக்காளர் பட்டிய லில் இருந்து 1,371 பெயரை நீக்கம் செய்யவும் விண்ணப்பம் பெறப்பட்டுள் ளது. ஒட்டு மொத்தமாக அதிக விண்ண ப்பங்கள் பெறப்பட்ட தொகுதியாக பெரம்பூர் தொகுதி உள்ளது. அங்கு 9,013 படிவங்கள் பெறப்பட்டன. அடுத்த தாக கொளத்தூரில் 8,422 படிவங்க ளும் மூன்றாவதாக ஆர்.கே.நகர் தொகுதியில் 7,737 படிவங்களும் பெறப் பட்டன. சிறப்பு முகாம்கள் முடிந்தாலும் கூட  திங்கள் முதல் 28-ந்தேதி வரை மேலும் 4 நாட்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய மாநகராட்சி மண்டல அலுவல கங்களில் மனுக்கள் பெறப்படுகிறது.