districts

img

பெண்களுக்கு கழிப்பறை கேட்டு செங்கொடி சங்கம் ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர், அக். 4- கோட்டம் வாரியாக பெண்களுக்கு கழிப்பறை அனைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் அம்பத்தூர் மண்டல அலுவலக வளா கத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. என்.யூ.எல்.எம். குழுவை  ரத்து செய்ய வேண்டும், இந்த குழு மூலமாக சம்ப ளம் வழங்குவதை தவிர்த்து,  மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும், என்.யூ.எல்.எம். கையாடல் செய்வதை கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும், ஆர்.ஆர். சென்ட ரில் சமூக விரோத செயல் கள் நடை பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செய லாளர் பி.சீனிவாசலு, தலைவர் ஜே.பட்டாபி, நிர்வாகிகள் ராஜன், தேவ ராஜ், முனுசாமி, சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசி னர்.