districts

img

தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படும் ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தகவல்

ராணிப்பேட்டை, ஜன.6– சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் தொழிற்சாலைகள் தொடர்ந்து கண்காணிக்கப் படும் என மாவட்டஆட்சியர் தகவல் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், வன்னிவேடு பகுதியில் இயங்கி வரும் ராணிடெக் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 92 தோல் தொழிற் சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிக்க நவீன முறை யில் செயல்பட்டு செயல்பாடு களை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா பார்வை யிட்டு ஆய்வு செய்தார். தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரித்து பூஜ்ஜியம் முறையில் கழிவு நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் தோல் தொழிற்சாலைகளின் மறு பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 4.5 மில்லியன் லிட்டர் கழிவுநீர் பூஜ்ஜியம் முறையில் மறுசுழற்சியை செய்யப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து தூய்மையான ஆக்சிஜன் உற்பத்தி செய்தும் சூரிய ஒளி மூலம் நீராவி திடக்கழிவுகளை உலர்த்து தல் மற்றும் மேலாண்மை செய்யப்படுவதை பார்வை யிட்டார். ராணிப்பேட்டையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் தொழிற்சாலைகள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்  பாட்டு வாரிய செயற்பொறி யாளர் ரவிச்சந்திரன், ராணிடெக் சுத்திகரிப்பு நிறு வன தலைவர் ரமேஷ் பிரசாத், மேலாண்மை இயக்குநர் ஜபருல்லா, இயக்குநர் கலிமுல்லா சாகிப், சிப்காட் திட்ட இயக்குநர் மகேஸ்வரி, சுத்திகரிப்பு நிலைய பொது மேலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.