ராணிப்பேட்டை, பிப். 28 - ராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் 3 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளியன்று (பிப். 28) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வருவாய்த் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ. 3.42 கோடி மதிப் பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பா.ஜெயசுதா, நகர மன்றத் தலை வர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், நகர மன்ற துணைத் தலைவர் சீ.ம. ரமேஷ் கர்ணா, இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கங் களின் மலர்விழி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ரவிச்சந்திரன், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், வருவாய் கோட்டா ட்சியர் ராஜராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட நூலக அலுவலர் கணேசன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பப்பாசி) லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.