திருவண்ணாமலை,ஜூன் 9-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ரயில் பாதை திட்டங்களுக்கான பணி கள் கிடப்பில் போடப் பட்டுள்ளதாக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றச் சட்டி னார்.
திருவண்ணாமலை நக ருக்கு பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வெளி நாடுகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வருகை தருகின்றனர். திரு வண்ணாமலை தேரோடும் வீதியை திருப்பதி போல் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ. 15 கோடியில் மாட வீதி முழுவதும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை நடைபெற்றது. அப்போது தீபத் திரு விழாவையொட்டி மூன்று மாதத்திற்கு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் தொடங்கிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக திரு கூடல் தெரு திரௌபதி அம்மன் கோவில் முதல் பேகோபுர மேடு வட ஒத்தவாடை தெரு வரை ஒரு மீட்டர் ஆழத் திற்கு ஏற்கெனவே போடப் பட்டிருந்த தார் சாலையை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளியன்று (ஜூன் 9) ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர், “ பிரதமர் நரேந்திர மோடி ஒன்றிய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை என்னவென்றால் தமிழ்நாட்டை வஞ்சிப்பது தான், குறிப்பாக திரு வண்ணாமலை ரயில் பாதை திட்டம், திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை ரயில் பாதை, திண்டிவனம்-நகரி ஆகிய மூன்று திட்டங்களுக்கும் பணம் ஒதுக்கீடு செய்து நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை” என்றார்.