districts

img

ரேசன் கடைகளை திறக்காமல் அடம்பிடிக்கும் புதுவை அரசு

 புதுச்சேரி, பிப். 6- புதுச்சேரியில் ரேசன் கடை களை திறக்கக் கோரி பிப்.19 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியாவில் ரேசன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறி இருக்கிறது. புதுச்சேரியில் அரிசிக்கு பதில் பணம் கொடுப்பது என்பது மக்களை ஏமாற்றுகின்ற மோசடி திட்டமாகும். இந்த திட்டத்தை கண்டித்து, ரேசன் கடை களை திறக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி  அரசு மக்கள் தான் பணத்தை  விரும்புவதாக கூறி  6 மாதங்களுக்கு, 3 மாதங்க ளுக்கு என அரிசிக்கு பதில் பணத்தை வங்கியில் போட்டு வருகிறது. அநியாய பிடித்தம் பெரும்பாலான மக்கள் தினக் கூலிகளாக தான் உள்ளனர். வங்கியில் அரசு செலுத்தும் பணத்தை குறைந்த இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இல்லை என்று கூறி ரூ.100 முதல் ரூ.200 வரை வங்கி அதிகாரிகள் பிடித்தம் செய்துகொள்கிறார்கள். அதேப்போல் மகளிர் சுய உதவிக்கான கடனுக்கு பிடித்தம் செய்து கொள்கிறார்கள். கடந்தாண்டு வங்கியில் குறைந்த பட்ச நிலுவைத் தொகை இல்லை என்று கூறி  ஏடிஎம் எஸ்எம்எஸ் சேவை கட்டணம் என கூறி ரூ.36 ஆயிரம் கோடியை வசூலித்துள்ள தாக மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சர் தெரிவித்தார். எனவே தான் பொது விநியோக திட்டத்தின் படி  ரேசன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் இயக்கம் நடத்தி வரு கிறது. புதுச்சேரி என் ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, கடந்த மூன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது  ரேசன் கடையை திறந்து அரிசி, கோதுமை, சிறுதானியம் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி  கொடுத்து வருகிறது.  ஆனால் ஆளுநர், முதல்வர் தொடங்கி ஒன்றிய  அமைச்சர்கள் ரேசன் கடைகளை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 2021இல் ரூ.25க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி தற்போது ரூ.40 பொன்னி அரிசி ரூ.52லிருந்து ரூ.65க்கும், துவரம் பருப்பு ரூ.70ல் இருந்து ரூ.170 ஆகவும், உளுந்து ரூ.60ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்க ளில் ரேசன் கடைகள் மூலம் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை அந்த மாநில அரசு கள் வழங்கி வருகிறது. ரேசன் கடை என்பது மக்களுடைய உரிமை. இதை தடுப்பது யார்? எனவே, ரேசன் கடையை திறந்து அரிசி, பருப்பு எண்ணெய் வழங்க வலியுறுத்தி பிப். 19 முதல் 23 ஆம் தேதி வரை குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.  மேலும், கூட்டாட்சியை சீர்குலைக்கும் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆளுநர்கள் மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வருகிற 8 ஆம் தேதி சுதேசி பஞ்சாலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மூத்த தலைவர்கள் முருகன், சுதா சுந்தரராமன், செயற்குழு உறுப்பி னர்கள் பெருமாள், ராமச்சந்திரன், சத்தியா ஆகியோர் உடனிருந்தனர்.