புதுச்சேரி, டிச.8- புதுச்சேரி கல்வித்துறையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணி யில் அமர்த்துவதை கண்டித்து வாலிபர்-மாணவர் சங்கங்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசின் கல்வித் துறையில் காலியாக உள்ள 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங் களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு பணியில் அமர்த்துவதற்கு நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெற்றது. புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்துக் கொண்டி ருக்கும் நிலையில், ஓய்வு பெற்ற வர்களை மீண்டும் பணி அமர்த்தும் கல்வித்துறையின் முடிவை எதிர்த்து எல்லப்பிள்ளை சாவடியில் உள்ள இயக்குநர் அலுவலகத்தின் அறையை முற்றுகையிட்டு மாண வர்கள் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை இந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் ஆனந்த், இந்திய மாணவர் சங்க செயலாளர் பிரவீன், இளைஞர் பெருமன்ற செயலாளர் அந்தோணி மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் உட்பட ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகளிடம் காவல்துறையினர் பேச்சு நடத்தி னர். அப்போது, ஓய்வு பெற்றவர் களை பணியில் அமர்த்துவதை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றனர். சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஒய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத் ்தக்கது.