districts

img

மத்தூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, நவ.14- போச்சம்பள்ளி வட்டம், மத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை ஆங்கி லேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தாகும். தற்போது புதிய கட்டிடங்களில் மருத்துவ மனை இயங்கி வருகிறது. சுற்று வட்டாரங்களை சேர்ந்த சுமார் 60 கிராம மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.நாள் தோறும் 200 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், மிகக் குறைந்த அளவில் உள் நோயாளிகளும்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உள்ள ஒரு மருத்துவரும் முறையாக பணிக்கு வருவதில்லை, வாராந்திர மருத்துவ பரிசோதனைக்கு கர்ப்பிணிகள் வரும்   போதும் மருத்துவர் இல்லாததால் அவர் பரி சோதித்துக் கொள்ள முடி யாத இக்கட்டான நிலை உள்ளது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை, மாத்தி ரைகள் வழங்கும் பணியை  தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர். அவர்க ளுக்கு போதிய அளவு அனுபவம் இல்லை என புகார் எழுந்துள்ளது. தற்பொழுது நல்ல நிலை யில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டி டங்கள் பயன்பாடுத்தாமல் உள்ளதால் கட்டிடம் பாழடைந்துவருகிறது. மேலும் இந்த கட்டடம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படக்கூடும் என்ப தால் அதனை மறுசீர மைப்பு செய்து அரசு அலுவ லகங்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பல ஆண்டுகளாக பழு தடைந்துள்ளதால் நோயாளிகள் குடிநீருக்கு திண்டாடி பணம் கொடுத்து தண்ணீர்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போதிய மருத்து வர்கள், ஊழியர்களை நியமித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  மத்தூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி நவீனப்படுத்த வேண்டும் எனவும் பொது மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.