சென்னை, நவ. 10 - நுகர்வோருக்கு சிறப்பான சேவை அளிக்க, தேவையான அளவு தரமான தள வாடப் பொருட்களை கொள்முதல் செய்து வழங்க வேண்டுமென்று மின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-2ன் 3வது மாநாடு ஞாயிறன்று (நவ.10) பல்லா வரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மின்வாரியத்தில் காலியாக உள்ள 60ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசாணை 100ல் உள்ள தொழி லாளர் விரோத பிரிவுகளை நீக்கி, அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், மின்வாரி யத்தில் ஊதியமின்றி பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், தாம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்தில் சேர்க்க கூடாது, பல்லாவரம் கிழக்கு மற்றும் மேற்கு பிரிவு அலுவலங்களை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், கேங்மேன் பதவியை கள உதவியாளராக மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்லாவரம் கோட்ட துணைத்தலைவர் டோம்னிக் சேவியர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். பல்லாவரம் கோட்ட துணைத்தலைவர் கே.குமார் மாநாட்டு கொடியை ஏற்றினார். சோழிங்கநல்லூர் கோட்ட செயலாளர் பா.டில்லிக்குமார் வரவேற்க, அடையாறு கோட்டச் செயலாளர் பி.அன்பழகன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். செயலாளர் அறிக்கையை பி.கௌதமனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் என்.பிரபுதேவாவும் சமர்ப்பித்தனர். மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், மாநில துணைத்தலைவர் இ.விஜயலட்சுமி, தென்சென்னை கிளை-1ன் பொருளாளர் எஸ்.குமார், தமிழ்நாடு மின்வாரிய பொறி யாளர் அமைப்பின் மாநில பொருளாளர் ஆதன் இளங்கீரன், தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தென்சென்னை கிளை-2ன் செயலாளர் ஆர்.லாரன்ஸ் சகாய ஆரோக்கியராஜ் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார் நிறைவுரையாற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மே.ஹெலன் தேவகிருபை நன்றி கூறினார். நிர்வாகிகள் கிளை-2ன் தலைவராக பா.டில்லிக் குமார், செயலாளராக மே.ஹெலன் தேவ கிருபை, பொருளாளராக என்.பிரபுதேவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.