districts

img

ஏரி மண் கொள்ளையை தடுத்திடுக: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விழுப்புரம், ஜூன் 15- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி மண்ணை கொள்ளை அடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கல்லூரி வட்டத்தலைவர் எம்.ராமலிங்கம் தலைமையில் வட்டாட்சியர் கார்த்தி கேயன், உதவி ஆய்வாளர் மருது ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட காரணதாங்கல் ஏரியில் பெரிய (டரஸ்) லாரிகள் மூலம் தினசரி 800 நடைக்கு மேல் மண் அள்ளப்பட்டு, ஓட்டேரிக்கு செல்லும் பெரிய பாலம் அருகில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்திற்கு மண் எடுத்துச் செல்லப்படு கிறது. ஆனால் வண்டல் மண்ணுக்கும், அரசு வீடு கட்டும் திட்டத்திற்கும் மண் எடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது.  மேலும் ஏரி மண்ணை கொள்ளை யடிப்பதற்காக காரணதாங்கல் ஏரியிலிருந்து ஓட்டேரிக்கு செல்லும் ஓடை வாய்க்காலின் கரைகளை சரித்து சமப்படுத்தி லாரி செல்லும் பாதையாக மாற்றியுள்ளனர். இதனால் நீர் வரத்து பாதிக்கப்படும். எனவே இந்த மண் கொள்ளையில் ஈடுபடும் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சபாபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதற்கும் பயன்படுத்தப்படும் ஜேசிபி இயந்திரம், லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.