சென்னை,நவ. 22- இந்திய கோழிப்பண்ணைகளுக்கான சாதன உற்பத்தி யாளர்கள் சங்கம் (ஐபிஇஎம்ஏ) தெற்காசியாவின் மிகப்பெரிய சர்வதேச கோழி கண்காட்சியான இந்திய கோழிப்பண்ணை 16வது கண்காட்சி 2024ஐ நடத்தவுள்ளது. ஐதராபாத் நகரில் நவ. 27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலு மிருந்து ஏராளமான கோழி பண்ணை நிறுவனங்கள் மற்றும் பண்ணைகளுக்கு தேவைப்படும் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தியாவில் கோழிப்பண்ணை தொழிலில் இதுவரை கண்டறியப்படாத வளம் என்ற கருப்பொருளுடன் இந்த கண்காட்சியும் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. உலகளா விய கோழி உற்பத்தித் தொழிலில் சமீபத்திய கண்டு பிடிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளமாக இது இருக்கும். இந்த ஆண்டு பதிப்பில் 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான கோழிப் பண்ணை உரிமையாளர்கள் இதில் கலந்து கொள்கிறார் கள்.