districts

img

அம்பேத்கர் நகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மனு

சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஆகியோரை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் தலைவர் மூசா, சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் ஆகியோர் சந்தித்து  மனு அளித்தனர். அந்த மனுவில் சிதம்பரம் நகரத்தில் அம்பேத்கர் நகரில் 70 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க  மாநில அரசிடம் வலியுறுத்துமாறு கூறப்பட்டுள்ளது.