அண்ணாநகர் பகுதி 107 வட்டம் ஆசாத் நகரில் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கிரைய பத்திரம் வழங்காமல் கால தாமதம் செய்து வருகிறது. இதனையடுத்து வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவை, சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதிக்குழு உறுப்பினர் பெ.சீனிவாசன், ஆசாத் நகர் குமார், 105வது வட்டச் செயலாளர் எஸ்.சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அப்பொழுது, மனுவை பரிசீலித்து விரைவில் கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கோவிந்தராவ் உறுதி அளித்துள்ளார்.