districts

img

தோல் தொழிற்சாலை கழிவு நீரால் ராணிப்பேட்டை மக்கள் அவதி

ராணிப்பேட்டை, செப்.5 - தமிழ்நாட்டில் 3வது சிறந்த நகராட்சி என  ராணிப்பேட்டை நகராட்சி கடந்த சுதந்திர  தினத்தன்று (ஆக. 15) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சான்று பெற்றுள்ளது. வாலாஜா வட்டம், ராணிப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட சீனிவாசன் பேட்டை 10வது வார்டு தோப்பு தெரு பகுதி யில் பல ஆண்டுகளாக 150 வீடுகளில் சுமார்  500 பேர் வசித்து வருகின்றனர்.  அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வா யில் தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் மழைக் காலம் மற்றும் இரவு  நேரங்களில் அதிக அளவில் விடப்படுகிறது.  இதனால் அப்பகுதியில் குழந்தைகள், முதி யோருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், இருமல், ஒவ்வாமை, தோல்நோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தும் தனியார் தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிலத்தடி நீர் மாசு அடைவதுடன் பகுதி மக்கள் நோய் வாய்ப்படுவது  அதிகரித்துள்ளது.  எனவே இந்த பிரச்சனையில் மாசுக்கட் டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை, மாவட்ட  நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அப்பகுதி  மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.