திருவண்ணாமலை, நவ.28- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ளது மேல் கரிப்பூர் கிராமம். இங்கு பல தலைமுறையாக வாழ்ந்து வரும் வேட்டைக்காரன் இன மக்களுக்கு, இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2007 ஆம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, பட்டா வழங்கி னார். 100க்கும் மேற்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பட்டாக்களை கிராம பதிவேட்டில் இதுவரைக்கும் அதிகாரிகள் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அந்த மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை. பல தலைமுறையாக வாழும் இந்த மக்கள், இயற்கை பேரிடரில் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ள முறை யான வீடு கட்டி வாழ முடியாமல் பரிதவித்த வருகின்றனர். எனவே, வேட்டைக்காரன் பழங்குடி மக்களுக்கு பட்டாவை கிராம பதிவேட்டில் ஏற்றி தர வேண்டும் என வலியுறுத்தி, தண்டராம்பட்டு வட்டாட்சி யரிடம், வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், பரி சீலனை செய்து, பட்டா வழங்குவதாக தெரி வித்தார். இதில், வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் கங்கா துரை, அகில இந்திய ஆதிவாசிகள் மேடையின் மத்திய குழு உறுப்பினர் சண்முகம், வேட்டைக்காரன் சங்க மாநில துணை செயலாளர் சின்னையா, வேலூர் மாவட்டச் செய லாளர் ரமேஷ் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் லட்சு மணன், சிபிஎம் வட்டாரச் செயலாளர் சக்திவேல், மாவட்ட நிர்வாகிகள் பாலு, வேலு, மணி, முரு கன், தலைவர் லட்சுமணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.