districts

img

கடலூர் மாநகராட்சியில் ஓய்வூதிய நிலுவைத் தொகை

கடலூர்,செப்.5- கடலூர் மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கும்  நிகழ்ச்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. தூய்மைப் பணியாளர்கள், மின் ஊழியர்கள் உட்பட 11 பேருக்கு மொத்தம் ரூ.49 லட்சம் ஓய்வூதிய நிலுவைத்  தொகையை மேயர் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேலாளர் (பொறுப்பு) நூர் அலி, கணக்கர் காதர் நவாஸ், திமுக மாணவர் அணி துணை அமைப் பாளர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.