சிதம்பரம் அருகே வேளக்குடி மேம்பாலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையை புறவழி சாலை அமைப்பதற்காக நகாய் நிறுவனம் இடித்து தரைமட்டமாக்கியது. சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், ஏற்கெனவே இருந்த பயணிகள் நிழற்குடையை அமைக்கவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன், பாமக விவசாய அணி மாநில தலைவர் சஞ்சீவி, அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன், பாமக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், சிபிஎம் குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முனுசாமி, முள்ளங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிரிஜா அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.