districts

img

சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக வலுவான செங்குரல் -ப.செல்வன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

நூண்றாண்டைக் கடந்த  கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அளப்பரிய தியா கங்களை செய்திருக்கின்றது. இன்று வரை இப்பணிகள் தொடர்கிறது என்பது வரலாற்று உண்மை.   ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டமாக பிரிந்த பின்னர் மாவட்டத்தின் வளர்ச்சி க்கும் மக்களின் பொருளாதார மேம்பாட் டிற்கும் விவசாயம், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்களுக்கு ஆதர வாகவும், பெண்கள், குழந்தை கள் மீதான பாலியல் வன்முறைக ளுக்கு எதிராகவும் சிபிஎம் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தி யுள்ளது.  பட்டியலின, பழங்குடி மக்க ளுக்கு எதிராக இழைக்கப்படும்  சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களும் பஞ்சமி  நிலம் மீட்பு போராட்டமும் இன்றளவும்  தொடர்கிறது.  தண்டராம்பட்டு வட்டம், தென்முடி யனூர் ஊராட்சியில் ஸ்ரீ முத்துமாரி யம்மன் ஆலயத்திற்குள்  பட்டியலின மக்கள் சென்று வழிபட முடியாத நிலையை எதிர்த்து மக்களை திரட்டி ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிய பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமூக நீதிக்கான வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களையும் நடத்தி யுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஒடுக்க ப்பட்ட, விளிம்புநிலை மக்களை பொரு ளாதார, சமூக ஒடுக்கு முறையில்  இருந்து முற்றிலுமாக விடுவிக்க மாவட்ட மாநாட்டின் தீர்மானங்கள் திசைக்காட்டும்.