சென்னை, பிப்.1 ஒமைக்ரான் தொற்று குறைய தொடங்கியதால் தமிழகத்தில் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டு செவ்வாயன்று (பிப்.1) முதல் கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று குறைய தொடங்கிய போது மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளும், சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. அதன்பிறகு ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவ தொடங்கியது. தினசரி தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் அதிகரித்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற் கரைகளும் மூடப்பட்டன. அங்கு பொதுமக்கள் அனு மதிக்கப்படவில்லை. இந்தநிலையில் ஒமைக் ரான் தொற்று குறைய தொடங்கியதால் தமிழ கத்தில் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டு பிப்.1 முதல் கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழ கத்தில் அனைத்து கடற்கரை களும் திறக்கப்பட்டன. சென்னையில் மெரினா மற்றும் எலியர்ட்ஸ் கடற்கரை திறக்கப்பட்டதால் அதி காலை 5.30 மணி முதலே பொதுமக்கள் வரத் தொடங் கினார்கள்.
இதனால் கடற்கரைகள் காலை நேரத் திலேயே களை கட்டியது. கடற்கரையில் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கும்மாளம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். கடலில் குளித்து உற்சாகம் அடைந்தனர். கடற்கரை மணற்பரப்பி லும் ஏராளமானோர் குடும் பத்துடன் வந்து அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். கடற்கரையில் நடைபயிற்சி செய்யவும் ஏராளமானோர் வந்திருந்த னர். ஆண்கள், பெண்கள் என அனைவருமே உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்ட னர். மெரினா கடற்கரையில் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் பொதுமக்கள் காலையிலேயே உடற் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் மெரினா கடற்கரை யில் கால், கைகளுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி செய்யும் வகையில் சாத னங்கள் உள்ளன. அந்த உடற் பயிற்சிகளையும் பொது மக்கள் மேற்கொண்டனர். கடற்கரையில் பொது மக்களுக்கு அனுமதி அளிக் கப்பட்டதால் மெரினாவில் உணவகங்களும் திறக்கப் பட்டன. கடற்கரைக்கு பொழுதை கழிக்க வந்த பொது மக்கள் கடைகளில் தங்களுக்கு விருப்பமான உணவை வாங்கி சாப்பிட்ட னர். நேரம் செல்ல செல்ல தொடர்ந்து பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங் கியது.