districts

img

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய சமுதாயக் கூடம் திறப்பு

ராணிப்பேட்டை, ஆக. 14 - ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் நாகவேடு ஊராட்சியில் தாட்கோ சார்பில் மாநில அரசு திட்டத்தின் கீழ் ரூ.55.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக் கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதனன்று (ஆக. 14) திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா சமுதாயக் கூடத்தில் குத்துவிளக்கேற்றினார். இதில் ஒன்றியக் குழுத் தலைவர் வடிவேலு, வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.