தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி (ஜன.30) செவ்வாயன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் மற்றும் மாவட்ட செயலாளர் மருதன் ஆகியோரை காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையிலான காவல்துறையினர் குண்டு கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.