districts

img

சிபிஎம்-தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் வெற்றி

கிருஷ்ணகிரி, செப்.30-  பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கியும் 40 ஆண்டு காலமாக நிலத்தை ஒப்படைக்காத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நிலத்தை கைப்பற்றும் போராட்டம் நடத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.  கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்தில் உள்ளது கோட்டையூர் கிராமம். இங்குள்ள 33 பட்டியலின குடும்பங்களுக்கு 1985 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதன்பிறகு, இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது வரைக்கும் அந்த இடத்தை அளந்து கொடுக்கவில்லை. வீடு கட்டிக்கொள்ளவும் அனுமதிக்க வில்லை.இதையடுத்து. கடந்த ஓராண்டாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியும் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது.அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, தோழர்.பி.சீனிவாச ராவ் நினைவு தினத்தை முன்னிட்டு (செப்.30) அன்று கோட்டையூரில் பட்டாவுக்கான நிலத்தை கைப்பற்றும் போராட்டம் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன்,மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர் இருதயராஜ்,சுரேஷ்,மகாலிங்கம்,சி.பி. ஜெயராமன்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவர் நாராயண மூர்த்தி, சிபிஎம் இடைக்குழு செய லாளர்கள் தேவராஜன்,ராஜா, சீனிவாசன் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் லெனின் முருகன், இள வரசன்,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ்,குமாரவடிவேல் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா கலந்து கொண்டனர்.இதையடுத்து, ஆதிதிராவிட நலத்துறை அலுவலர், வருவாய் அதிகாரிகள், காவல்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நீதிமன்றம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வெகு விரைவில் முடித்து அதே இடத்தில் 33 நபர்கள் வீடு கட்டிக் கொள்ள உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்றும் மேலும், வீடு இல்லாத 40க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களுக்கு வேறு இடத்தில் வீட்டு மனை வழங்கு வதாகவும் உறுதியளித்தனர்.