கள்ளக்குறிச்சி,அக். 6- செங்குறிச்சி கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது. செங்குறிச்சி கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இடப்பற்றாக்குறையால் மாணவர்கள் வெயிலில் தரையில் அமர்ந்து படிக்கும் அவலநிலை உள்ளது. இதனால், கூடுத லாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று மாண வர்கள் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். மேலும், செங்குறிச்சி சுங்கச்சாவடி சுற்றி தனி யார் உணவகங்கள் அதிக மாக இயங்கி வருகிறது. இதில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவு நீர் தாங்கள் மற்றும் பெரிய ஏரி களில் கலப்பதால் பாதிக்கப் படும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், கங்கை அம்மன் கோவில்,அய்யனார் கோவில் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும், பேருந்து நிலையத்திலிருந்து நைனா குப்பம் வரை செல்லும் தார் சாலையை சீரமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனல் அரசு அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் எஸ்.சித்திரை சேனன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் டி.எஸ்.மோகன், ஜெயக்குமார் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து போராட்ட பந்தலுக்கு வந்த திருநாவலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலை வர், ஊராட்சி செயலர் ஆகியோர் பேச்சு நடத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறை வேற்ற விரைந்து நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.