districts

img

5 வருடமாக அலகழிக்கும் அதிகாரிகள்: குடும்பத்துடன் முதியவர் போராட்டம்

திருவண்ணாமலை,ஜன.19- திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் சுபான் என்ற முதியவர். அதே கிராமத்தில் சர்வே எண் 46 இல் உள்ள தனது நிலத்திற்கான கூட்டுப்பட்டாவை பிரித்து தனது பெயருக்கு தனி பட்டாவாக வழங்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், புதனன்று(ஜன.19) வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.