கிருஷ்ணகிரி,ஜூலை 20-
சூளகிரியில் இருந்து ராமன் தொட்டி வழியாக நகரப் பேருந்துகள் காலையும் மாலையும் மட்டும் வந்து செல்கின்றன. ஆனால், பல நேரங்களில் நிறுத்துவதில்லை. அப்படியே நின்றாலும் மாணவர்களை ஏற்றுவது கிடையாது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத நிலை ஏற்பட்டது.
மாணவர்களை பேருந்தில் ஏற்றாமல் செல்லும் பேருந்து கிராம மக்களுடன் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மறியல் செய்து சிறை பிடித்தனர். இதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தினசரி பேருந்தை நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்வதாக உறுதி கொடுத்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.