சென்னை, செப். 26- ஆன்லைன் குளறுபடி களை சீரமைத்து பதிவுகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று அமைப்புசாரா வடசென்னை மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்புசாரா தொழில் களின் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட 18ஆவது மாநாடு பெரம்பூரில் நடைபெற்றது. மணலி பகுதிச் செயலாளர் ஆர்.அசோக்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை மாவட்ட துணைத் தலைவர் மா.பூ பாலன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.லோகநாதன் வேலை அறிக்கையையும், பொரு ளாளர். கே.ஜீவானந்தம் வரவு, செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஆர்.ஜெயராமன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக பெரம் பூர் பகுதிச் செயலாளர் கே.ஜாகீர் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை நன்றி கூறினார். தீர்மானங்கள் 60 வயதை கடந்த அனை வருக்கும் மாத ஓய்வூதிய மாக ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும், விண்ணப்பித்த வர்களுக்கு பணப் பலன் களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும், வடசென்னை அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தலைவராக ஆர்.மணி மேகலை, செயலாளராக ஆர்.லோகநாதன், பொரு ளாளராக கே.ஜாகீர் உள்ளிட்ட 27 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.