districts

சிதம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்

சென்னை,ஜன.13- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளியன்று(ஜன.13) நடந்த கேள்வி நேரத்தின் போது சிதம்பரம் நகரில் இயங்கி வரும் மிக பழமையான சார்பதிவாளர் அலு வலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டி கொடுக்க அரசு முன்வருமா? என்று சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி,“ சிதம்பரம் பதிவு மாவட்டம், ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம், மாவட்டப் பதி வாளர்(தணிக்கை) பிரிவு அலுவலகம் மற்றும் 1 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவ்வலுவலக கட்டிடம் 114 ஆண்டுகள் பழமையானது. அதை அகற்றிவிட்டு புதிதாக கட்டடம் கட்டு வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பணிகள் துவங்கும்”என்றார். பரங்கிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலு வலகம் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு பதிவு பணி களுக்காக வந்து செல்கின்றனர். எனவே இந்த கட்டிடத்தையும் புதி தாக கட்டித் தரப்படுமா? என்றும் பாண்டியன் துணைக் கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், “ புதிய கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.