கள்ளக்குறிச்சி, ஆக. 22- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் 2010 ஆம் ஆண்டு களவு போனது. இந்த சம்பவத்தில், வழக்கை காலதாமதம் செய்து வரும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருடு போன 1790 சவரன் நகைகளுக்கு இன்றைய மதிப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநாவலூர் கெடிலம் கடை வீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.