districts

img

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி

திருவள்ளூர், ஆக. 3-

      திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட தேசிய பேரிடர் மீட்பு  குழுவின் நான்காம் பட்டா லியன் பிரிவு கமாண்டர் மணி கண்டன் தலைமையில் வியாழனன்று (ஆக-3),   முதலுதவி பயிற்சி நடை பெற்றது.  

     அரசு பள்ளியை சேர்ந்த  6ஆம் வகுப்பு முதல் 12ஆம்  வகுப்பு வரை உள்ள மாண வர்கள் இதில் பங்கேற்று பேரிடர் காலங்களில் சக மனி தருக்கு எவ்வாறு முதலு தவி பயிற்சிகள் அளிப்பது என்பது குறித்து ஒத்திகை களை நடத்தி காட்டினர். மேலும் மாணவர்களை ஒத்திகையில் ஈடுபடச்செய்த னர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.