சென்னை,ஜன.25- தேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் சனிக்கிழமை (ஜன.25) தூய்மைப்பணியில் மூத்த குடிமக்களுக்கான இல்லமாக திகழும் அதுல்யா சீனியர் கேர் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். 98 வயதான சமுக செயற்பாட்டாளர் காமாட்சி சுப்பிரமணியன் (காமாட்சி பாட்டி) சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான தனது பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம் பாராட்டப்பட்டார். இந்த தூய்மைப்பணியில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் ஒரு டன் கழிவுகள் மற்றும் குப்பைகளை சேக ரித்தனர். தன்னார்வலர்கள், கடற்கரை எங்கும் சிதறிக் கிடந்த குப்பைகளையும், கழிவுப் பொருட்களையும் கணிசமான அளவு அகற்றி இந்த அழகான கடற்கரையை தூய்மை யாக்கி சமூகத்தினர் மகிழ்ச்சியோடு வந்து செல்லும் அமைவிடமாக மாற்றினர். இந்த பணியில் அர்பேசர் சுமித் மற்றும் சென்னை சமூகப்பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.