districts

img

10ஆண்டுகளுக்கு பிறகு மியூசிக் அகாடமி மார்கழி இசை கச்சேரியில் டி.எம். கிருஷ்ணா! அரங்கம் நிரம்பி வழிந்தது

சென்னை,டிச.26- இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக் கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை  நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.  கர்நாடக இசையில் பெரியார் குறித்த பாடல்களை டி.எம். கிருஷ்ணா பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறார். கர்நாடக இசை உயர்சாதி இந்துக்களின் வசமாக்கப்பட்டி ருப்பதை விமர்சித்து பேசி வரும் டி.எம்.  கிருஷ்ணா கர்நாடக இசையை எல்லோ ரும் பயிலும் வகையில் ஆல்காட் குப்பம் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் சென்று கச்சேரி நடத்தி வந்தார்.  கலைப் பன்முகத்தன்மைக்கு எதி ரான சூழல் இருப்பதால் இனி மார்கழி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு டி.எம். கிருஷ்ணா அறிவித்தார். அதன்படி கடந்தாண்டு வரை மார்கழி இசைக் கச்சேரிகளில் அவர் பாடல்கள் பாட வில்லை. இந்நிலையில் இந்தாண்டு நடை பெறும் சென்னை மார்கழி கச்சேரி களில் பங்கேற்பேன் என்று டி.எம். கிருஷ்ணா அண்மையில் அறிவித்தார். அதன்படி மியூசிக் அகாடமியின் 98ஆவது ஆண்டு மார்கழி கச்சேரி களின் ஒரு பகுதியாக டி.எம்.கிருஷ்ணா வின் கச்சேரி புதனன்று நடைபெற்றது. டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியை காண ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்தது. இதனால் அரங்கிற்கு வெளியே நின்றபடியே நிறைய ரசிகர்கள் கச்சேரியை கேட்டு ரசித்தனர். மார்கழி இசைக் கச்சேரியில் டி.எம். கிருஷ்ணா பாரம்பரிய மரபுகளை உடைக்கும் விதமாக லுங்கியும் பீச் ஷர்ட் அணிந்து வந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இசை கச்சேரியில், “ராமரோ, கிறிஸ் துவோ, அல்லாவோ எல்லா இறையரு ளும் ஒன்றுதான் எல்லா மனிதரும் ஒன்று தான் என்று பொருள்படும் பாடல்களை டி.எம். கிருஷ்ணா பாடினார்.  குறிப்பாக பெருமாள் முருகன் எழுதிய ‘சுதந்திரம் வேண்டும்’ பாடலை அவர் பாடியது குறிப்பிடத்தக்கது.