districts

img

தொகுப்பு வீடுகள் வழங்குவதில் முறைகேடு: மலைவாழ் மக்கள் சங்கம் போராட்டம்

திருவள்ளூர், ஜூலை 3- திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமரசேரி இருளர் காலனியில் லட்சுமி, சுகுணா ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மாற்று இடத்திற்கான குடிமனை பட்டா செஞ்சி பானம்பாக்கத்தில் வழங்கப்பட்டது.  அந்த இடத்தை திருவள்ளூர் வட்டாட்சியர் இதுவரை அளவீடு செய்து பயனாளி யிடம் வீட்டு மனையை ஒப்படைக்கவில்லை. இந்த சூழலில் ஜூன் 26  அன்று குமரசேரி ஊராட்சி செயலர் சரவணன் என்பவர் கடம்பத்தூர் பிடிஒ அலுவலகத்திற்கு லட்சுமி, சுகுணா ஆகியோரை வரவழைத்து உங்களுக்கு பிஎம் ஜென்மன் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்திற்கான தொகை யில் தொகுப்பு வீடு வந்திருக்கிறது படிவத்தில் கையெழுத்து போடுங்கள் என்று வட்டாட்சியர் வற்புறுத்தியுள்ளார். ரூ.4 லட்சத்து 38 ஆயிரம்  மதிப்பீட்டில் அரசு வழங்கும் தொகுப்பு வீடு திட்டத்தில்,  வீடு வழங்குங்கள் என்று அவர்கள்  கேட்டுள்ளனர். அதெல்லாம் கொடுக்க முடியாது. 3 லட்சத்தில் வீடு வேண்டாம் என்றால்,  இனி  உங்களுக்கு எப்போதும் வீடு கிடைக்காது என்று ஊராட்சி செயலாளர் சரவணன் மிரட்டியுள்ளார்.  மேலும் கையெழுத்து போட்டே ஆக வேண்டும் லட்சுமியையும், சுகுணா வையும் வற்புறுத்தியுள்ளார். அதே ஊராட்சியில் உள்ள மாற்று சமூகத்தினருக்கு மட்டும் ரூ.5 லட்சத்தில் வீடு கட்டித்தருவதாக அவர் கூறியுள்ளார். இப்படி ஊராட்சி செயலாளர் பாகு பாட்டுடன் நடந்துகொள் வதற்கு இருளர் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழங்குடியினர் மக்களி டம் தலா ரூ.500 கேட்கிறார். எதற்கு என்று கேட்டால் நிலம் அளவீடு செய்யவும்,  கல் நடவும்,  செலவுகள் அதிகமாக இருக்கிறது. எனவே நீங்கள் கட்டாயம்  கொடுத்தாக வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இது குறித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு,  கடம்பத் தூர் ஒன்றிய தலைவர் அற்புதம், ஒன்றிய செயலா ளர் சின்னராசு ஆகியோர் திங்களன்று (ஜூலை 1), திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.