districts

img

பொது சிவில் சட்டத்தை கைவிடுக

சென்னை, செப். 27 - இந்தியாவின் பன்முகத்தன்மையை பிளவுபடுத்தும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் தென்சென்னை மாவட்ட 4வது மாநாடு செவ்வாயன்று (செப். 26) சைதாப்பேட்டையில் நடைபெற்றது. தீர்மானங்கள் நீண்ட நாட்களாக சிறையில் விசார ணையின்றி இருக்கும் முஸ்லீம் சிறை வாசிகளை விடுதலை செய்ய  வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் மீது விரைந்து தண்டனை வழங்கும் சட்டத்தை நிறை வேற்ற வேண்டும், தலித் கிறிஸ்தவர் களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு தேவை யான இடங்களில் அடக்கஸ்தலமும் (கபர்ஸ்தான்), கிறித்தவர்களுக்கு கல்ல றைகளும் எந்தவித பாரபட்சமும் இன்றி அமைத்து தர வேண்டும், மாதந் தோறும் சிறுபான்மையினர் குறைதீர்ப்பு கூட்டங்களை ஆட்சியர்கள் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்க ளும் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு கே.வனஜகுமாரி, ஜி.ரஹ்மத்துல்லா, பி.ஜீவா, கே.மணி கண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணைச்செயலாளர் எஸ்.ரஃபிக் வர வேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில துணைத்தலைவர் மூசா பேசினார்.  வேலை அறிக்கையை செயலாளர் ஒய்.இஸ்மாயில் சமர்ப்பித்தார். சமூக செயற்பாட்டாளர் க.பீம்ராவ், அச்சு தொழில் புரிவோர் சங்க பொதுச்செய லாளர் எம்.சையத் அலி கோயா, வர்த்தகர் ஜெ.பொன்சிங், வர்த்தக காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.எம்.மணி, சைதாப்பேட்டை இசிஐ சேர்மன் எஸ்.செல்வின்துரை, கே.முஹம்மது ஷப்பீர் அலி உள்ளிட்டோர் பேசினர். மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பி.சாரதி நன்றி கூறினார். 29 பேர் கொண்ட மாவட்டக் குழுவின் தலைவராக பி.ஜீவா, செயலாளராக ஒய்.இஸ்மாயில், பொருளாளராக கே.மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.