districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சா.மு.நாசர்

திருவள்ளூர், ஜன. 13- திருவள்ளூர் மாவட்ட த்தில் 226 மாற்றுத்திறனாளி களுக்கு  ரூ.60.5லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்  தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  திங்களன்று (ஜன 13) திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் பன்நோக்கு கூட்டரங்கம் கட்டடம் கட்டும் பணி யினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 226 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50.5 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி யர்  த.பிரபு சங்கர், சட்ட மன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ். சந்திரன் (திருத்தணி), ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.