districts

அரசு பெண்கள் கலை கல்லூரி அமைக்க நடவடிக்கை அமைச்சர் மஸ்தான் தகவல்

விழுப்புரம், ஜூலை 5-

    விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு தினத்தை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் சித்தரா விஜயன், திண்டிவனம் சாராட்சியர கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ரூ 1.33 கோடி மதிப்பில் 317 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா புதிய குடும்ப அட்டை தையல் எந்திரம் வேளாண் உபகரண கருவிகள் முதியோர் உதவித்தொகை மற்றும் இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர்களுக்கு எஸ்.டி பிரிவுக்கான வகுப்பு சான்று உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை வழங்கினார்.  

    நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “மரக்காணம் பகுதி யில் தற்போது பறவைகள் சரணாலயம், பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை, மீனவர்கள் நலம் கருதி மீன்பிடி துறைமுகம் மற்றும் மீனவர் கிராமங்களில் மீன் தளம் போன்றவை பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது”என்றார்.

    இந்த பகுதியில் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மரக்காணம் அரசு பொது மருத்துவமனையை நவீன முறையில் தரம் உயர்த்த நட வடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதியில் பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரியை அமைக்க விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.