ராணிப்பேட்டை, ஜன. 24 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல மைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆற்காடு-திண்டிவனம் இடையிலான மாநில நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ரூ.32.50 கோடி மதிப் பீட்டில் 4.4 கி.மீ நீளத்திற்கு சாலையை 4 வழித்தடமாக அகலப்படுத்தும் பணியை கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார். இந்த சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள 337 மரங்கள் அகற்றப்பட்டது. ஈடுகட்டும் வகையில் 1 மரத்திற்கு 10 மரங்கள் வீதம் நெடுஞ்சாலைத் துறை மூலம் 3370 மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளார். ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளி யன்று (ஜன.24) நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தார். ஆற்காடு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்திய நாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் (தரக் கட்டுப் பாடு) செல்வகுமார், உதவி இயக்குநர் சர வணன், உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் வடி வேல், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி, ஒப்பந்ததாரர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.