திருவண்ணாமலை,செப்.14- திருவண்ணாமலையில் பழங்குடியின மக்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கப்பட்டது. அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியின மக்களுக்கு திருவண்ணா மலை நகராட்சி அலுவலகம் எதிரில், பழங்குடியினர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையில் இணைந்து 636 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரத்தில் இலவச கறவை பசுக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்பு துறை சோமசுந்தரம், பழங்குடியினர் நல அலுவலர் செந்தில் குமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் ஜெயக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.