districts

img

ஒரு நாட்டின் சமுதாய வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம்

வேலூர், ஏப். 4 - வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில்  அனைவர்க்கும் உயர் கல்வி  அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவ,மாணவிகள் உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை வழங்கும் விழா விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை நிர்வாகி மயிலாம்பிகை குமரகுர அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் செயலாளர் ஜெ.லட்சுமணன், நிதிக்குழு தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு, பொருளாளர் ஜவரிலால்ஜெயின், மரு.நர்மதா அசோக், வே.பதுமனார், கேஎம்ஜி.ராஜேந்திரன், கே.எம்.தேவராஜ், பாஸ்கரன், அஞ்சுசக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.பி.கே.வாசுகி பங்கேற்று  598 மாணவர்களுக்கு ரூ.68. 38 லட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கினார். இதுவரை 8682 மாணவ மாணவியருக்கு ரூ.10.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் 5851 ஆண்கள் 2831 ஆவர்.  பின்னர் அவர் பேசுகையில். கல்வி என்பது  அனைவரின் உரிமை; கல்வி தான் நாட்டின் வளர்ச்சி. குறிப்பாக பெண்கள் கல்வி  கற்றால் சமுதாயமும் முன்னேற்றம் அடையும்; நாடும் வளர்ச்சி அடையும் என்று  பேசினார். நிறைவாக திட்ட ஒருங்கிணைப் பாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார். முன்னதாக உயர் கல்வி  அறக்கட்ட ளைக்கு தொடர்ந்து ஆதரவும், நிதியுதவி செய்து வரும் வேலூர் மாவட்ட பிரமுகர்கள்,  வணிகர்கள் மற்றும் விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.