மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி, சூளை கட்சி கிளை உறுப்பினர் ஆல்டா குமாரின் மனைவி பாரதி உடல் நலக்குறைவால் செவ்வாயன்று (அக்.29) காலமானார். அவருக்கு வயது 65. அவரது உடலுக்கு கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் கே.முருகன், பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜெ.பார்த்திபன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அன்னாரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக ராமசந்திரா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.