விஜயவாடா அருகே எல்லுருவில் செய்கோ சொட்டகன் அட்வான்ஸ் கராதே டு இந்தியா சார்பில் அகில இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் 3ஆம் இடத்தை பிடித்தனர். நேஷ்னல் ஸ்போட்ஸ் கராத்தே அகடமி பொறுப்பாளர் ஷிஹான் என்.முரளி (7வது கருப்புப்பட்டை), ரென்சி டி.சுதாகர் (5வது கருப்புபட்டை), சென்சாய் ஜி.ரமேஷ் (3வது கருப்புபட்டை) ஆகியோர் தலைமையில் பங்கேற்ற மாணவர்களில் 7 பேர் தங்கப்பதக்கமும் 3 வெள்ளி, 8 வெண்கலமும் வென்று சென்னை திரும்பினர்.