குப்பை, கட்டிட கழிவுகளுக்கு அபராதம் வசூலிப்பது முறைப்படுத்தப்படும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு
சென்னை, டிச. 30 - குப்பை, கட்டிட கழிவுகளுக்கு அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட வில்லை. அபராதம் வசூலிப்பது முறைப்படுத்தப்படும் என்று பெருநகர சென்னை மாநகரட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். மன்றக்கூட்டம் திங்களன்று (டிச.30) நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பேசிய மன்ற உறுப்பினர்கள் பலரும், சாலை,தெருக்களில் கொட்டப்படும் குப்பை, கட்டிடக் கழிவுகளுக்கு அபராதங்கள் அதிகமாக இருப்பதுடன் வசூலிக்கும் முறைக்கு அதிருப்தி தெரி வித்தனர். சாலைக்கு நல்லகண்ணு பெயர்! தோழர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் முக்கிய சாலை ஒன்றிற்கு அவரது பெயரை சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்று மதிமுக உறுப்பினர் ப.சுப்பிரமணியும், குருஞானக் கல்லூரி முதல் 5 பர்லாங் சாலை இடையே வாகன மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் துரைராஜூம் கோரினர். வளசரவாக்கம் மண்டலத்தில் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் (அடக்கஸ்தலம்) அமைக்க வேண்டும். மண்டலத்திற்கு ஒரு கபர்ஸ்தானை அமைக்க மாநகராட்சி முன்வர வேண்டும். கட்டணமின்றி உடல்களை மாநகராட்சி தகனம் அல்லது அடக்கம் செய்து வருகிறது. மேலும் ஒருவர் இறந்தால் இலவசமாக அமரர் ஊர்தி, பந்தல், சேர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் ராஜன் கேட்டார். இவற்றிற்கு பதிலளித்த மேயர், சாலையில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. நகர விற்பனைக் குழுவிற்கான துணைக் குழுவில் வார்டு உறுப்பினர்கள் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மாடு உரிமையாளர்களின் நலன் சார்ந்து மண்டலம் வாரியாக மாட்டுத் தொழுவம் அமைக்கப்படுகிறது. உரிமையாளர்கள் அதில் கொண்டு வந்து மாடுகளை பராமரித்துக் கொள்ளலாம். சென்னையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட இன்டர்நெட் நிறு வனங்களின் கம்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. ரெட் பார்ம் வழங்க மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மின்மயானங்களில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்படும். மாநகராட்சியில் பல்வேறு நிலைகளில் 5061 காலிப்பணியிடங்கள் உள்ளது என்றார். இதனை தொடர்ந்து பாலம், குளம், எரிவாயு தகனமேடை அமைத்தல், மழைநீர் கால்வாய் கட்டுதல், சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புத்தாண்டு கொண்டாட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு
செங்கல்பட்டு, டிச. 30- செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தாண்டு இரவு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் 670 காவலர்கள் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் 2025 முன்னிட்டு டிசம்பர் 31 பிற்பகல் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை , பழைய மாமல்லபுரம் சாலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர் மேலும் மாவட்டத்தில் சுமார் 180-க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஆறு துணை காவல் கண்காணிப்பாளர்கள் 20 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 645 காவலர்கள் என 671 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை , பழைய மாமல்லபுரம் சாலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டமானது. 1ம் தேதி 12.30 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும் கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு பொது மக்கள் திருவிடந்தை முதல் கடப்பாக்கம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடலில் இறங்கி குளிக்கவும் மற்றும் படகில் கடலுக்குள் அழைத்து செல்வதையும் தடைசெய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டால் தொலைபேசி எண்ணான 7200102104-க்கு எவ்வித தயக்கமுமின்றி தொலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல் தெரிவிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வாகனங்களின் பேட்டரி திருட்டு
சென்னை, டிச.30- திருவள்ளூர் மாவட்டம், முத்தா புதுப்பேட்டை அடுத்த கிழ்கொண்டயார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் விநாயக டிராக்டர் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது கடைக்கு கனரக வாகங்கள், டிராக்டர் போன்றவை வாகனங்கள் பழுது நீக்க வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கடைக்கு வந்த டிராக்டர்கள், கனரக வாகனங்கள் பராமரிப்பு காரணமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி வழக்கம்போல தொழிலுக்கு வந்த சுரேஷ் வாகனங்களை பழுது பார்த்து விட்டு இரவு அங்கேயே விட்டு விட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கனரக வாகனம் டிராக்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த பேட்டரி திருடு போயிருந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பேட்டரி திருடனை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், வேளச்சேரியைச் சேர்ந்த யாஷின் முகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்தும் யாஷின் முகமதுவிடமிருந்து 60 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாணவி பாலியல் வன்கொடுமை தேசிய மகளிர் ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை நிறைவு
சென்னை, டிச.30- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைகழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மாணவிகளிடம் மேற்கொண்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை முதல் சுமார் 7 மணி நேரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குழு விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது. அப்போது, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி விவரத்துடன் எப்ஐஆர் வெளியானது குறித்தும் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
வாலிபர் சங்க பல்லாவரம் பகுதி பேரவை
சென்னை, டிச. 30 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பல்லாவரம் பகுதி பேரவை ஞாயிறன்று (டிச.29) பல்லாவரத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, மாநிலக்குழு உறுப்பினர் முனைவர் அ.ஜானகிதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பகுதி தலைவராக ஆர்.ஹேமகுமார், செயலாளராக ம.சிந்தன், பொருளாளராக சி.சக்திவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டைக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்
ராணிப்பேட்டை,டிச.30– ராணிப்பேட்டை மாவட்ட த்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர் விவேகா னந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி யிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்கள் புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் பணி செய்து வந்த காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி வடக்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த விவேகானந்தா சுக்லா ராணிப்பேட்டை மாவட்டம் புதிய காவல் கண்காணிப்பாளராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
ஆணையர் அவமதிப்பு செய்ததாக மன்றக் கூட்டத்தில் சிபிஎம் புகார் இனி அதுபோன்று நடக்காது: மேயர் பிரியா
சென்னை, டிச. 30 - ஆணையரை சந்திக்க சென்ற சிபிஎம் தலைவர்களையும், தங்களையும் ஆணையர் அவமானப்படுத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் திங்களன்று (டிச.30) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. நேரமில்லா நேரத்தில் பேசிய சிபிஎம் குழுத் தலைவர் ஆர்.ஜெயராமன், “மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்களோடு நாங்கள் 3 உறுப்பினர்கள் ஆணையரை சந்தித்து மனு கொடுக்கச் சென்றோம். அதை பார்த்ததும் டென்ஷனாகி பேசிய வார்த்தைகள் காயப்படுத்துவதாக இருந்தது. ‘டோண்ட் வேஸ்ட் மை டைம். கிளம்புங்க.. கிளம்புங்க.. நிறைய வேலை இருக்கு” என்றார். கட்சி தலைவர்கள், கவுன் சிலர்களிடம் இப்படியாக நடந்துகொள்ளும் அவரின் அணுகுமுறை சரியில்லை” என்றார். இதற்கு மேயர் பிரியா அளித்த பொருத்த மற்ற விளக்கத்தை ஏற்க மறுத்து சிபிஎம் உறுப்பினர் எம்.சரஸ்வதி ஆட்சேபனை தெரி வித்தார். அப்போது பேசிய மற்றொரு சிபிஎம் உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, “வார்டு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை மாநகராட்சி ஆணையரை சந்திக்க சென்றால், வெளியே போங்கள் என்பது என்ன நாகரீகம். எவ்வளவு பணிகள் இருந்தா லும் உறுப்பினர்களை நாகரீகமாக நடத்த வேண்டாமா? மாமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிலைதான் உள்ளது. வேறு பிரச்ச னைகளை எப்படி அவரிடம் கொண்டு செல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது மீண்டும் பேசிய ஆர்.ஜெய ராமன், “மேயர் முன் அனுமதி பெற்று ஆணை யரை சந்திக்க வேண்டும் என்கிறார். 3 மாத மாக முன்அனுமதி கேட்டும் அவர் தர வில்லை” என்றார். இதனையடுத்து பேசிய மேயர், இனி வரும் காலங்களில் இது போன்று நிகழாது என்றார். மாமன்ற உறுப்பி னர்கள் புகாருக்கு மேயர் விளக்கமளித்த நிலையில் மாநகராட்சி ஆணையர் குமர குருபரன் பதில் அளிக்காமல் அமர்ந்திருந் தார்.
“பாக்சிங் டே” டெஸ்ட் ஆஸ்திரேலியா அபார வெற்றி
5 போட்டிகளைக் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி “பாக்சிங் டே” என்ற பெயரில் ஆஸ்திரேலியா வின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரே லிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கிய நிலையில், மூத்த வீரர் ஸ்மித்தின் (140) அபார சதத்தின் உதவியால் முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்ச மாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நிதிஷின் (114) அசத்தலான சதத்தின் உதவியால் 119.3 ஓவர்க ளில் 369 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிக பட்சமாக கம்மின்ஸ், லயன், போலந்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி னர். 105 ரன்கள் முன்னிலை யுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி லபுஸ் சாக்னே (70), கம்மின்ஸ் (41), லயன் (41) உள்ளிட்டோரின் நிதான ஆட்டத்தால் 83.4 ஓவர் களில் 234 ரன்களுக்கு ஆட்ட மிழந்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 340 ரன்கள் நிர்ணயம் செய்தது. கடினமான இலக்கு டன் களமிறங்கிய இந்திய அணி வழக்கம் போல ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மிக மோசமான அளவில் திணறியது இறுதியில் இந்திய அணி 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்ட மிழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.