ராணிப்பேட்டை, ஜூலை 29 - வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அனைத்திந்தி ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாதர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட முதல் மாநாடு கீதா தலைமையில் நடைபெற்றது. கே.ஆண்டாள் சங்கக் கொடியை ஏற்றினார். ஆர்.சங்கீதா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமயந்தி வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஜி.பிரமிளா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட அமைப்பாளர் ஆர். திலகா வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.டி.சங்கரி, சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் என்.காசிநாதன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி ஆகியோர் வாழ்த்திப் பேசினார். தீர்மானங்கள் வாலாஜா உள்ள தலைமை அரசு மருத்துவமனையை அனைத்து உட்கட்ட மைப்பு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூண்டி கிராமத்தில் மக்களை ஏமாற்றி சீட்டு நடத்தி மக்களின் பணத்தை பண மோசடி செய்த நபர் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக ஆர்.கீதா, செயலாளராக ஆர்.திலகா, பொருளாளராக ஆர்.சங்கீதா உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.