சென்னை, டிச. 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி, 38 வது வார்டு கிளை உறுப்பினர் தோழர் எஸ்.செல்வசுந்தரம் வெள்ளியன்று (டிச.17) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், மார்க்சிஸ்ட் கட்சியின் இணைந்தார். பம்மல்-அனகாபுத்தூர் பகுதி குழு உறுப்பினராகவும் செயலாற்றினார். குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.நரசிம்மன், எம்.தாமு, எஸ்.ஜெயசங்கரன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் லட்சுமி நகர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.