கிருஷ்ணகிரி,ஜூலை 7-
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் துறையில் பதிவு செய்யாமல் தொழில் புரிவோர் உடனடியாகத் பதிவு செய்ய வேண்டும். காலம் தாழ்த்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கே.என். சரயு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் உணவு, உறைவிடம், கூடார சுற்றுலா, சுற்றுலா, கேரவன் பேருந்து நடத்துபவர்கள், சுற்றுலாத் துறையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாவட்டத்தில் உள்ள உண்டி மற்றும் உறையுள் சுற்றுலா தொழில் புரிவோர் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், பதிவு செய்யாத நிறுவனங்களும் சுற்றுலாத் துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதுவரையிலும், சுற்றுலாத் துறையில் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தும் சுற்றுலா தொழில் புரிவோர் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.