திருவண்ணமாலையில் டெரி டஸ் ஹோம் கேர் என்ற தொண்டு நிறுவனத்தில் இருந்து 10 வயது முதல் 18 வயது வரை உள்ள ஆதரவற்ற குழந்தைகள் 50 பேருக்கு மே 1 முதல் 31 வரைக்கும் மல்லர் கம்ப பயிற்சி கொடுத்தனர். மேலும், அந்த குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அலுவலர் நோயிலின் ஜான் கலந்து கொண்டார்.