districts

img

சோழவரம் அருகே தீப்பிடித்த லாரி: ஓட்டுநர் பலி

சென்னை, மே 29- சோழவரம் அருகே சாலையோரம் லாரியை நிறுத்த முயன்ற போது உயரழுத்த மின்சாரம் பாய்ந்து டயர் தீப்பற்றிய தில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. சோழ வரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் லாரியை  ஓர மாக ஓட்டுநர் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் லாரி பட்டு டயர் தீப்பற்றி யது. டயரில் பற்றிய தீயை அணைக்க முயன்ற போது, ஓட்டுநர் தவறி தீயில் விழுந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலி யானார். இதுகுறித்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல் துறையினர் ஓட்டுநரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஓட்டுநர் பெயர் ரபி கர்மாகர் (31) என்பதும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

;